தமிழகத்தில் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் கொரோனா – அமைச்சரின் எச்சரிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

தமிழகத்தில் பல இடங்களில் பரவி வரும் கொரோனா தொற்று, தற்போது கிராமங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

 கிராமங்களில் கொரோனா :

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. தொடர் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், கட்டப்பட்டுள்ள கை-மாற்று அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொற்று பரவல் குறித்த முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில்  கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது எனவும், நாள்தோறும் 1.50லட்சம்  மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலுள்ள 1,21,000 கிராமங்களில், 24,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொற்று பாதிப்பு இருப்பதாகவும், இதனால் 3,787 தெருக்கள் தடை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொற்று பாதித்த 94% நபர்கள் வீட்டு தனிமையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here