கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ், மூன்று அலைகளாக பரவி, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. தமிழக அரசு எடுத்த தீவிரமான கட்டுப்பாடுகளால், தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாதிப்பு குறைந்து வந்தாலும், அண்டை நாடுகளில் வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசு மேற்கொள்ள உள்ள அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட, முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொற்று பரவலை வைத்தே, தமிழகத்தில் முழு ஊரடங்கு குறித்த முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்