வாரணாசியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே வருகின்றனர். இதனால் அக்கோவிலில் அர்ச்சகர் சாமி சிலைக்கும் முகக்கவசம் அணிவித்திருந்தார்.
கோவில் அர்ச்சகர்
வாரணாசி கோவிலில் சாமிக்கு முகக்கவசம் அணிவித்திருந்ததை குறித்து அந்த கோவில் அர்ச்சகர் ஆனந்த் பாண்டே கூறியதாவது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. எனவே கொரோனா விழிப்புணர்வை ஏற்படடுத்தவே விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவித்தோம்.
நாங்கள் கோவிலில் சிலைகளுக்கு குளிர்காலத்தில் துணிகளை போர்த்துவதும் மற்றும் வெயில் காலத்தில் ஏசி மற்றும் மின்விசிறிகள் வைப்பதும் வழக்கம். அதேபோல் கொரோனா தொற்றின் காரணமாக சிலைக்கு முகக்கவசம் அணிவித்துளோம். அதே போல் மக்கள் யாரும் சிலைகளை தொட கூடாது என்று தெரிவித்துள்ளோம். ஏனென்றால் சிலைகளை தொடும்போது வைரஸ் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.அதனால் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் அனைவரும் முகக்கவசம் அணித்தே தரிசனம் செய்கின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |