தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இனி பயிற்சி வகுப்புகள் – அறிமுகமான முக்கிய திட்டம்!

0
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இனி பயிற்சி வகுப்புகள் - அறிமுகமான முக்கிய திட்டம்!

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிய திட்டமாக தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றத்திற்காக மாநகராட்சி உதவி கல்வி அதிகாரிகள் உள்பட 600 பேருக்கு பட்டறை மற்றும் பயிற்சி அமர்வுகள் நடைபெற உள்ளது.

புதிய பயிற்சி:

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பல வித வசதிகளை கொண்டு வருவதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மாநகராட்சி பள்ளிகளுக்கான பள்ளி தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றம் (எஸ்எல்டிடி) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் இரண்டு கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த திட்டத்திற்காக திறன்மிக்க தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என கிட்டத்தட்ட 600 பேரை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 பேருக்கு தனித்தனியாக மாதத்திற்கு இரு நாட்கள் ஏதேனும் ஒரு கருப்பொருளினை மையமாக கொண்டு பயிற்சி அளிக்கப்படும். மாதத்திற்கு மொத்தம் 10 நாட்களில் 5 கருப்பொருள் குறித்து வகுப்புகள் எடுக்கப்படும்.அதுமட்டுமின்றி இந்த 600 பேரையும் 20 குழுக்களாக பிரித்து குழுவுக்கு 30 பேருக்கு வகுப்பு நடைபெறும். இந்த வகுப்புகளை மாநகராட்சி கல்வித்துறை ஆணையர் சினேகா, ஆணையர் ககன் தீப் சிங்பேடி ஆகியோர் கண்காணிக்க உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here