சென்னையில் முக்கிய போக்குவரத்தாக பார்க்கப்படும் மின்சார ரயில் வழித்தடங்களில், அண்மைக்காலமாக பல்வேறு பகுதிகளிலும் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்நேரங்களில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாளை (மார்ச் 3) கோடம்பாக்கம் to தாம்பரம் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், 44 மின்சார ரயில் இயக்கங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்..
அதன்படி சென்னை கடற்கரை to தாம்பரத்திற்கு காலை 10.30 மணி முதல் மதியம் 02.30 மணி வரை செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து. அதேபோல் காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை, தாம்பரம் to சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
TNPSC “குரூப் 1” தேர்வர்களே., இந்த பயிற்சி மிகவும் கட்டாயம்? மாஸ் அப்டேட்!!!