புத்திர தோஷம் நீங்கி விரைவில் குழந்தை வரம் பெற – எளிய பரிகாரங்கள்!!

0
baby names
baby names

தற்போது உள்ள தலைமுறையில் தலைதூக்கியுள்ள பெரிய பிரச்சனையே குழந்தையின்மை தான். முக்கியமாக ஐ.டி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கே பெரும்பாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் மடிக்கணினி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. குழந்தையின்மை பிரச்னையை நீக்க சில வழிபாடுகள் உள்ளன. அது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

புத்திர தோஷம்:

ஒருவருக்கு திருமணம் ஆன நாளில் இருந்து அவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் குழந்தை பிறக்கவில்லை எனில் அவர்களை தரக்குறைவாக பேசுவதே பலருக்கு வாடிக்கையாக உள்ளது. எங்கு சென்றாலும் நல்ல விசயம் எதுவும் இல்லையா என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

suriyan
suriyan

இந்த குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் ஜாதக ரீதியாக அறிந்து கொள்ளலாம். சூரியபகவான் ஒரு ஜாதகத்தில் தந்தை ஸ்தானத்தில் உள்ளனர். அந்த வகையில் ஒருவருக்கு சூரிய பகவானால் புத்திர தோஷம் இருக்குமானால் அவரின் முன் பிறவியில் அவர் தந்தைக்கு வயதான காலத்தில் சாப்பாடு போடாமல் போட்டிபோட்டு அவர்களின் சாபத்தை பெற்றிருப்பர். அதனால் இந்த புத்திர தோஷம் ஏற்படும்.

பரிகாரங்கள்

இந்த புத்திர தோஷம் நீங்க 100 கிராம் கோதுமையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 9 பாகங்களாக பிரித்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு சுத்தமான துணியை எடுத்து 9 துண்டுகளாக பிரித்துக் கொள்ளவும். இந்த கோதுமையை அந்த 9 துணிகளில் கட்டி முடிச்சு போட வேண்டும். இதனை பூஜையறையில் வைத்து இரவில் தூங்கும்போது கணவன் மனைவி படுக்கும் தலையணைக்கு அடியில் வைத்து காலை எழுந்து கை, கால் மற்றும் முகத்தை கழுவி கோதுமை முடிப்பை கையில் எடுத்து சூரிய பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என்று 9 முறை கூறி வழிபட வேண்டும்.

இதே போல் ஒவ்வொரு நாளும் ஒரு கோதுமை முடிப்பை வைத்து வழிபட வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து 9 நாட்கள் முடிந்து ஆற்றிலோ அல்லது கம்மாயிலோ யாரும் பாத்திராமல் போட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் புத்திர தோஷம் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here