சுந்தரி சீரியலில் புது நாயகன் அறிமுகம் – இனி தான் கதையே ஆரமிக்க போகுது!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் புது கதாநாயகன் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து, இனிதான் கதையே ஆரம்பம் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

புது நாயகன்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த தொடரில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாயகி கேப்ரியெல்லா தனது கருப்பான தோற்றத்தை தன்னுடைய பாசிட்டிவ் ரோலாக மாற்றியுள்ளார். இந்த சீரியலில், அவரது கணவர் கார்த்திக் சுந்தரியை வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொள்கிறார்.

இதனால், இவரோடு வாழ பிடிக்காமல் அனு என்ற மற்றொரு பெண்ணை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார்.  இதனால், இந்த தொடரின் நாயகி சுந்தரி கதாநாயகன் இருந்தும் இல்லாதது போல் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது ஜெய் என்ற புது நடிகர் இந்த சீரியலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள், ஒரு வேளை அவர் தான் சுந்தரி நாயகனோ என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் கண்டிப்பாக ஜெய்க்கு சுந்தரி மீது காதல் வருவது போல் காட்டப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் கண்டிப்பாக இனி சீரியல் சூடு பிடித்து விடும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here