கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கின் போது மது கடைகள் மூடப்பட்டதை அடுத்து மதுக்கு அடிமையானவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு சில மாநிலங்கள் மதுக்கடைகளை திறக்கத் தொடங்கியுள்ளன.
மதுவால் நல்ல வருமானம்..!
கொரோனா வைரஸால் 21 நாட்களுக்குக்கான ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. மேலும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கு அமலில் இருந்த நாட்களில் மதுக்கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. இதனால் மது பிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மது கிடைக்காததால் அதிகரிக்கும் தற்கொலை – அசாமில் ஊரடங்கு முடியாமலே மது கடைகள் திறப்பு.!
சிலர் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து மதுக்கடைகளை திறப்பது பற்றி சில மாநிலங்கள் ஆலோசனை நடத்தின.
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/liq-2-1.jpg)
மதுக்கடைகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது. இவற்றை மூடியதால் மாநிலங்கள் நஷ்டத்தை சந்தித்து கொண்டிருக்கின்றன
மது விற்பனைக்கு உத்தரவு..!
இந்த சூழலில் வடகிழக்கில் உள்ள அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் மதுக்கடைகளை திறக்க நேற்று உத்தரவிட்டது.
சாப்பாடு இல்லை.. பெற்ற 5 குழந்தைகளை கங்கையில் தூக்கி வீசிய தாய் – குடும்ப தகராறு காரணமா..?
இதேபோல் டெல்லி, மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் குறிப்பிட்ட அளவு மதுக்கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளன. இதன்மூலம் சிறிய அளவில் வருமானம் ஈட்டவும் ஆலோசித்து வருகின்றன.
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/liq-m-1.jpg)
மேற்குவங்கத்தில் வீட்டிற்கே சென்று மதுபானங்கள் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் மதுபான விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் இறுதி முதல் மதுக்கடைகள் திறப்பதற்கு உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |