
மத்திய அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் பணியாளர் தேர்வாணையம் (SSC) நிரப்பி வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறைகளில் உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. கிரேட் C மற்றும் கிரேட் D பதவிக்கான இந்த தேர்வு எழுத, குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
Computer Based, Skill Test, Document Verification என மூன்று நிலைகளாக நடைபெற உள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கு SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று (செப்டம்பர் 4) முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர்.