ஆசிய கோப்பை தொடரில் முதல் முறையாக பங்கேற்ற நேபாள அணி, 2 போட்டிகளை சர்வதேச அளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக மோதியது. இந்த 2 போட்டிகளிலிலும் நேபாளம் அணி தோல்வியை தழுவினாலும் சர்வதேச அணிகளுக்கு எதிராக விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளது. இதில், குறிப்பாக நேற்று இந்திய அணிக்கு எதிராக ஆசிப் ஷேக் (58) மற்றும் குஷால் புர்டெல் (38) ஆகியோர் அதிரடியாக விளையாடி அசத்தி இருந்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளூர் நிறுவனம் ஒன்று இந்திய அணிக்கு எதிராக சிக்ஸர் அடித்த வீரர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சமும், ஒரு பவுண்டரிக்கு வீதம் ரூ. 25,000-மும் வழங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்திய அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் போட்டோ எடுத்து கொண்டும், ஆட்டோகிராப் வாங்கியும் வீரர்கள் மகிழ்ந்தனர். இதில், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் சோம்பால் கமியின் சூ-வில் (காலனியில்) ஆட்டோகிராப் வழங்கி விராட் கோலி நேபாள வீரர்களின் ஆசையை நிறைவேற்றி வைத்தார்.
ஆசிய கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்…, வெளியான புள்ளிப் பட்டியல்!!