அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.., ஜனவரி முதல் இனி இந்த சலுகையும் உண்டு.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

0
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் மதிய உணவு திட்டம் மற்றும் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அம்மாநிலத்தில் 300 அரசு பள்ளிகள் உள்ள நிலையில் மதிய உணவு திட்டம், காலையில் பால், வாரத்திற்கு மூன்று முட்டை போன்றவை வழங்கப்படுகிறது. தற்போது இதைத் தொடர்ந்து சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தையும் தொடங்க உள்ளனர். மேலும் இதற்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளதாகவும், அது முடிந்தவுடன் ஜனவரி மாத இறுதிக்குள் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மாலை சிறுதானிய பிஸ்கட் வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here