சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது எக்கச்சக்க திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஸ்ருதியின் செயலால் அண்ணாமலைக்கு மீண்டும் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். இந்த விஷயம் முத்துவுக்கு தெரிந்து ஸ்ருதியிடம் சண்டை போடுகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விஜயா கந்துவட்டிகாரரிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட சென்றபோது அந்த பணத்தை பைக்கில் வந்த சில நபர்கள் திருடி விட்டனர்.
அதில் மீனாவின் தம்பி சத்யாவும் ஒருவன். மேலும் இந்த பணத்தை கண்டுபிடித்து தர போலீசில் விஜயா கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். இப்படி இருக்கையில் இந்த பணத்தை திருடியது மீனாவின் தம்பி சத்யா தான் என்ற விஷயம் முத்துவுக்கு தெரிந்து விடுமாம். இதனால் முத்து கடும் கோபத்தில் இருப்பாராம். மேலும் இந்த விஷயத்தால் குடும்பத்துக்குள் அடுத்து என்னென்ன பிரச்சனை வெடிக்க போகிறது என்று தெரியவில்லை. மேலும் இதனால் மீனாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் சூழ்நிலையில் உள்ளது.