சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரீநிதி, மன அழுத்தம் தற்போது காரணமாக மன நோய் சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதிரடி தகவல் :
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம், மிகப் பெரிய அளவில் ரீச் ஆனவர் நடிகை ஸ்ரீநிதி. இவர், சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் குறித்து நெகட்டிவான கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அஜித் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்ததால், மனமுடைந்து மன்னிப்பு கேட்டார்.
இது ஒருபுறமிருக்க கடந்த சில தினங்களுக்கு முன் சிம்பு தன்னை, காதலிப்பதாக கூறி அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும், தனது சக நடிகை நட்சத்திரா திருமணம் குறித்து மோசமான கருத்துக்களை பரப்பி, சர்ச்சை நாயகியாக மாறினார். இது குறித்து விளக்கமளித்த ஸ்ரீநிதி அம்மா, அவர் தீராத மன அழுத்தத்தில் இருப்பதால் அவரை யாரும் திட்ட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீநிதி சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு மன நோய் சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பழைய ஸ்ரீ நிதியாக திரும்பி வருவார் என அவரது பெற்றோர் உள்ளிட்ட நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்