தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முதியோர்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். அதேபோல் அண்டை மாநிலங்களான பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.250 முதல் ரூ.300 வரை ஓய்வூதியம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மருத்துவ படிப்புக்கான நீட் CUT OFF பூஜ்ஜியமாக குறைப்பு.., தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு!!!