தமிழகத்தில் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் எதிர்பாராதவிதமாக விபத்துக்கள், அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.