தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அவ்வப்போது அகவிலைப்படி, சம்பள உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகிய வண்ணம் உள்ளது. அதே போன்று ஊழியர்கள் பலரும் தமிழக அரசுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 1995 சிறப்பு பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை மதிப்பூதியமாக ரூ.20,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இதை உயர்த்தி பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இனி வரும் நாட்களில் இவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.25 ஆயிரமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here