கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பு மிக்கது. இந்நாட்களில் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு மண்டல பூஜைக்கான முன்பதிவு டிக்கெட்டுகளை https://sabarimalaonline.org/#/login என்ற இணையத்தளத்தில் தேவஸ்தானம் விநியோகம் செய்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
மண்டல பூஜைக்காக வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதன்பின் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.