இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டி இன்று சென்னை மைதானத்தில் வைத்து துவங்கியது. இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் மற்றும் கில் களமிறங்கினர். கில் 0 நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்பு ரோஹித் மற்றும் புஜாராவின் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இருந்தும் புஜாராவால் நீண்ட நேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. இவர் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்பு களம் வந்த கோஹ்லி 0 ஏமாற்றினார். முதல் போட்டியில் சொதப்பிய ரோஹித் சர்மா இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இவருக்கு தற்போது ரஹானே கம்பெனி கொடுத்து வருகிறார். அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
தமிழக அரசு உதவி பெற 1100 சேவை எண் , கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு – முதல்வர் எடப்பாடி அதிரடி!!
இவரது சதம் மூலம் தற்போது இந்தியா அணி சற்று வலுப்பெற்றுள்ளது. இவரது விக்கெட்டை எடுக்க இங்கிலாந்து அணியின் பௌலர்கள் திணறி வருகின்றனர். இதேபோல் ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இங்கிலாந்து அணிக்கு பெரும் நெருக்கடி கொடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது களத்தில் ரோஹித் மற்றும் ரஹானே விளையாடி வருகின்றனர்.
லைவ் ஸ்கோர்:
இந்தியா – 173/3
ரோஹித்- 118*
ரஹானே- 35*