ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் அரசு வழங்கி வருகிறது. மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து புலம்பெயரும் நபர் ரேஷன் தானியங்களை இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமென்றாலும் பெற்றுக் கொள்வதற்காக ”ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தை 2019 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டது.
இதோடு இந்தத் திட்டத்தில் ”போர்ட்டபிலிட்டி” என்ற ஒன்றை கூடுதலாக 2023 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரு உறுப்பினர் புலம்பெயரும் பட்சத்தில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அந்த மாநிலத்திலேயே தங்களுக்கான மானியங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு புலம்பெயர் ரேஷன் பயனாளிகள் தங்களுக்கு தேவையான உணவு தானியங்களை இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு தடையும் இன்றி பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இந்த ஆண்டில் 11 மாதத்தில் மட்டும் மேற்கூறிய திட்டத்தின் கீழ் 28 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.