முதல்வரிடம் வணிகர்கள் சங்கம் வைத்த கோரிக்கை!!! என்னவா இருக்கும்???

0

ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பதை குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் வணிகர்கள் சங்கம் தளர்வுகளை அறிவித்து கடைகளை திறக்க அனுமதிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை இந்த சங்கத்தின் பேரமைப்பு தலைவர்  விக்கிரமராஜா முன் வைக்க  உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் மளிகை கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வரும் முதல்வரிடம் சீக்கிரம்  கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க உள்ளோம் என்று வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்த காலத்தில் வீடு,வீடாக சென்று விற்பனை செய்யும் வணிகர்கள் அதிக விலைக்கு விற்றால் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் கீழ்  இயங்கும் கடைகளின்   வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே வியாபாரிகள் வாங்கியுள்ள கடனுக்கு மாத தவணை கட்டுவதிலிருந்து ஆறு மாத காலம் அவகாசம் தர வேண்டும் என்பதையும்  முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்  என்று கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here