ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான அறிவிப்பு குறித்த, முக்கிய தகவல்களை அரசு அதிரடியாக வெளியிட்டுள்ளது.
ஆயுஷ்மான் கார்டு:
நாடு முழுவதும், மத்திய பொது விநியோகத் துறையின் கீழ் ரேஷன் கார்டுதாரர்கள் உணவுப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பல மக்கள், இந்த மலிவு விலை ரேஷன் பொருட்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது, நாடு முழுவதும் அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, ஆயுஷ்மான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கார்டு மூலம், நாடு முழுவதும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் சம்பந்தப்பட்டவர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம்.
மாநிலத்தில் பள்ளிகளுக்கு அக்.9 வரை தொடர் விடுமுறை – அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவு!!
அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும், இந்த ஆயுஷ்மான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டை, பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் குறிப்பாக, அந்தியோதயா ரேஷன் கார்டு இல்லாதவர்கள் இந்த ஆயுஷ்மான் அட்டை பெற்று, இந்தத் திட்டத்தில் பயனடைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.