காதலியை கொன்றதாக 7 ஆண்டு சிறை.., வெளியே வந்தவுடன் லவ்வரை கையும் களவுமாக பிடித்த காதலன்!!

0

ராஜஸ்தானில் காதலியை கொன்றதாக கைது செய்யப்பட்ட காதலனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சிறைத்தண்டனை:

தற்போதைய உலகத்தில் காதல் என்ற பெயரில் சில அட்டுழியங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காதலர்கள் சில காரணத்தால் காதலி, காதலன் என்று பாராமல் கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது. இதை தடுக்க காவல்துறை, பெற்றோர்கள், அரசாங்கம் ஆகியோர் பல நடவடிக்கை எடுத்த போதிலும் குறையாமல் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தை சேர்ந்த ஆரத்தி என்ற பெண்ணை சோனு சைனி என்பவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.

மனைவிக்காக ரொமான்ஸில் இறங்கிய தனுஷ்.., வெக்கத்தில் சிவந்த ஐஸ்வர்யா.., மீண்டும் இணைய வாய்ப்பு இருக்குமோ??

இந்த வேளையில் கடந்த 2015ம் ஆண்டு ஆர்த்தி மாயமாகியுள்ளார். இவரை சோனு சைனி கல்யாணம் செய்து கொலை செய்து விட்டதாக ஆர்த்தி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சோனு சைனி மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் ஆகிய இருவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 5 வருடங்கள் சிறையில் இருந்த இருவரும் ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளனர். வெளியே வந்த கையோடு ஆர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்ட சோனு ஒருவழியாக ஆர்த்தி இருக்கும் இடத்தை அடையாள அட்டையுடன் கண்டு பிடித்து போலீஸ் ஒப்படைத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பின்னர் விசாரணையை தொடங்கிய காவல்துறை, பகவான் சிங் ரேபாரி என்பவருடன் ஆர்த்தி கல்யாணம் செய்து வாழ்ந்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் சோனு ஜெயிலுக்கு சென்றதும், இதனால் அவருடைய தந்தை இறந்ததும் ஆர்த்திக்கு தெரிந்தும் எதுவும் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆர்த்தி கொலை செய்ததாக கொடுக்கப்பட்ட வழக்கு பொய்யானது என்றும், இந்த வழக்கால் சோனு 20 லட்சம் கடனாளி ஆகி உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here