வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருடா வருடம் பெய்து வரும் நிலையில் இந்த ஆண்டு இயல்பை விட 17 சதவீதம் அதிகமாக பதிவாகியது. மேலும் தற்போது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதால் காற்றின் வலிமை வலுவிழந்து வருகிறது.
மாநில அரசின் இந்த பொது விடுமுறைக்கு திடீர் தடை – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இதனால் வரும் நவம்பர் 29 ந் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிலிருந்து தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 1 செ.மீ. முதல் 5 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கடற்கரை பகுதிகளில் மீன் பிடிக்க மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் தடையின்றி பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.