அரசின் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், தங்கள் பணி நேர முடியாமல் அலுவலகத்தை விட்டு வெளியேற தடை விதிப்பதாக, பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
அமைச்சர் அதிரடி :
அரசு ஊழியர்களின், அலுவலக வருகையை முறையாக கண்காணிப்பதற்காக பல மாநிலங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பஞ்சாப் அரசு மாநில ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், எக்காரணத்தை முன்னிட்டும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமல் பணி நேர முடியும் முன்பாக அலுவலகத்தை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுப்பணிகள் எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், இதனை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாக சீர்திருத்த அமைச்சர் அனைத்து துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு இறுதி காலக்கெடு., விரைந்து இதனை முடிக்க அறிவுறுத்தல்!!
சமீப நாட்களாக மாலை 5 மணிக்கு, ஊழியர்கள் தாங்களாக பணியை விட்டு வெளியேறியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தற்போது அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத் தக்கது.