பஞ்சாப் மாநிலத்தில், விடுதலைப் போராட்ட தியாகி பகத்சிங் அவர்களின் தியாக தினத்தை முன்னிட்டு, இன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மான் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
நீச்சல் குளத்தில் கவர்ச்சி அள்ள போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்., தூக்கல் கிளாமரில் திக்குமுக்காடும் ரசிகர்கள்!
முதல்வர் அறிவிப்பு:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கட்டாயம் 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அட்டவணைகளும் வெளியிடப்பட்டு, மாணவர்களின் முழு மூச்சாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் 18 வது முதல்வராக பகவந்த் மான் பதவி ஏற்று கொண்டார். அதன் பிறகு, சட்டப்பேரவை உரை நிகழ்த்தி இவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் மற்றும் சுக்தேவ், ராஜகுரு அவர்களின் தியாக தினத்தை முன்னிட்டு, மார்ச் 23 ஆம் தேதியான இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த நாளில் அவரது சொந்த கிராமமான கட்கர் கலனுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்த வேண்டும் என்று பேசியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால், பஞ்சாபில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்