மாநிலத்திற்கு வந்த 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிகாரிகள் பலத்த அதிர்ச்சி!!

0
குறையும் கொரோனா...இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு இனி இது மட்டும் போதும் - மத்திய அரசு அறிவிப்பு!!
குறையும் கொரோனா...இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு இனி இது மட்டும் போதும் - மத்திய அரசு அறிவிப்பு!!

இத்தாலி நாட்டில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்த 125 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

125 பேருக்கு கொரோனா :

இந்தியா முழுவதும் பல இடங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால், 3ம் அலை ஆரம்பித்து விட்டதாக உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்தாலியில் இருந்து ஏர் இந்தியா விமானம் வாயிலாக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் என்ற நகருக்கு 175 பயணிகள் வந்தனர்.

இந்த பயணிகளுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கிட்டத்தட்ட 125 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முழுமையான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் வைத்து 100க்கும் மேற்பட்ட  நபர்களுக்கு தொற்று உறுதியானதால், இங்கு மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here