தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மது கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா தாக்கம்..!
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/peela-rajesh-1024x576.jpg)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மது கிடைக்காததால் தற்கொலை..!
![](https://enewz.in/wp-content/uploads/2020/04/suicide-1.jpg)
ஊரடங்கு உத்தரவால் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மது கிடைக்காததால் லாரி ஓட்டுநர் கருப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவர் குடும்பத்தை பிரிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்த ஓட்டுநர் கருப்பையா மதுவுக்கு அடிமையானவர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஊரடங்கால் மது கிடைக்கததால் சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |