நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது நேபாளம் லம்ஜூங் மாவட்டத்தில் புல்புலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நேபாளம் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கத்திலிருந்து விடுபட முயற்சித்து வரும் நிலையில் ஆங்காங்கே இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மும்பையில் தாக்தே சூறாவளியின் காரணமாக 12 மணி நேரத்தில் 479 மரம் கீழே விழுந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது நேபாளம் லம்ஜூங் மாவட்டத்தில் புல்புலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளதால் இது சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.