தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 8) பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 8.17 லட்ச மாணவ மாணவியர்களில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதோடு தேர்வு முடிவுகளில் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் மே 13ம் தேதி வரை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கான கட்டண விதிமுறைகளையும் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தோல்வியடைந்தவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி ஜூன் 19 முதல் 26ம் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரை நடைபெற உள்ள இந்த தேர்வுகளின் அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.