விஜய் டிவியின் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருந்தவர் தான் நடிகை சம்யுக்தா. இவர் இந்த சீரியலில் தன்னுடன் நடித்து வந்த நடிகர் விஷ்ணு காந்த என்பவரை 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது இவரும் பிரிந்து விட்டனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இவர்களின் இன்ஸ்டா பக்கத்தில் ஒருவருக்கொருவர் unfollow செய்து விட்டு அதில் பதிவிட்டிருந்த தங்களின் திருமணம் புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர். இதை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இது குறித்து இவர்களிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.இதனை தொடர்ந்து இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் சம்யுக்தா அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ story ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மறைந்த மனோபாலாவின் கடைசி நிமிடங்கள்., தேற்றுவதற்கு மகன் செய்த காரியம் – கண் கலங்க வைக்கும் வீடியோ!!
அதில் dear haters, எனக்கு தெரியும் இப்போ நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பீங்கன்னு, ஏனென்றால் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் தற்போது நடந்துள்ளது. மேலும் நீங்க எதிர்ப்பாராத சில விஷயங்களை கூடிய விரைவில் நான் செய்ய இருக்கிறேன். அதையெல்லாம் ஏற்று கொள்ள வேண்டிய வலுவை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இருவரும் பிரிந்துள்ள நிலையில் இவரின் இப்படியான இப்பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.