மறைந்த நடிகர் மனோபாலாவின் கடைசி நிமிடங்களில் அவரை தேற்றுவதற்கு மகன் செய்த காரியம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் மனோ பாலா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் மனோ பாலா. அதன் பிறகு நடிப்பு மேலிருந்த மோகத்தால் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய இவர்,தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருந்தார்.இப்படி பிசியாக நடித்து வந்த அவர் சமீபத்தில் கல்லிரலில் ஏற்பட்ட பிரச்சனையால் காலமானார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் மனோ பாலாவின் ஆடைகளை அவருடைய மனைவி ட்ரஸ்டில் கொடுத்து அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தார். இந்நிலையில் அவரின் கடைசி நிமிடங்களில் அவருடைய மகன் செய்த காரியம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் தேறாத நிலையில் இருந்தபோது,அவருடைய மகன் ஹரிஷ் அவரை தேற்றுவதற்காக முருகன் பாடலை பாடியுள்ளார்.அதுவரை சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு வந்த அவர் பாடலை கேட்டு கொண்டே சாப்பிட தொடங்கினார். இருந்தாலும் மகனுடன் சேர்ந்து பாட முடியாமல் தவித்தது அப்படியே அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.