தமிழகத்தில் இன்று முதல் இலவச பிங்க் பேருந்து – வெற்றிகரமாக தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!

0
தமிழகத்தில் இன்று முதல் இலவச பிங்க் பேருந்து - வெற்றிகரமாக தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் பெண்களுக்காக இலவச பேருந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இலவச பேருந்து நிறத்தை பிங்க் நிறமாக மாற்றி இன்று உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

பிங்க் இலவச பேருந்து:

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தியது. அதில் முதல் திட்டமாக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த திட்டம் சாதாரண அரசு பேருந்துகள் மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு புதிதாக ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, பெண்கள் இலவச பேருந்து என்று சொகுசு பேருந்துகளில் பயணித்து ஏமாற்றம் அடைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்தின் நிறத்தை பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் பெண்கள் பிங்க் பேருந்து தான் இலவச பேருந்து என்று அறிந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த பிங்க் இலவச பேருந்தை இன்று (06-08-2022) சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here