அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் ஓய்வு கால நலன் கருதி மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் PF கணக்குதாரர்கள் பலரும் நாமினி தேர்வு செய்யாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மரணம் அடைந்த பிறகு ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் திருமணத்திற்கு முன் ஊழியர்கள் தொடங்கும் PF மற்றும் EPS விதிகள், திருமணம் ஆன உடனேயே மாற்றப்படுகிறது. எனவே திருமணத்துக்குப் பிறகு, உங்களுடைய மனைவி பெயரை நாமினியாக சேர்க்காவிட்டால் பெரிய அளவிலான இழப்பு ஏற்பட கூடும் என அறிவுறுத்தி உள்ளனர்.