என்ன மனுஷன்யா நீ.., 26 வருடத்தில் Officeக்கு ஒரே ஒரு நாள் விடுப்பு எடுத்த நபர்!!! 

0
இன்றைய காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் தனியார் ஊழியர்களுக்கும் தேவையான விடுமுறை கிடைத்தால் தான் சரிவர பணியை மேற்கொள்ள முடியும் என்று சூழல் உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தேஜ்பால் என்ற நபர் கடந்த 26 வருடமாக விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றியதாக இப்போது இணையத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது உத்திரபிரதேசத்தை சேர்ந்த இவர் ஒரு அலுவலகத்தில் கடந்த 26 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்த 26 வருடத்தில் ஜூன் 2003 ஜூன் 18 தனது தம்பியின் திருமணத்திற்காக விடுப்பு எடுத்துள்ளார். மேலும் அரசு விடுமுறை நாட்களான ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களின் போதும் அவர் பணியாற்றியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அவரிடம் கேட்டபோது வேலை மீதுள்ள அதீத  ஆர்வத்தினால் விடுப்பு எடுப்பதை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர் இப்போது இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் என்ற புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here