சர்வதேச அணிகள் அனைத்தும் ஒரு நாள் உலக கோப்பையை எதிர்நோக்கி உள்ளனர். இந்த உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஆசிய கோப்பை தொடரில் வரும் ஆகஸ்ட் 30 ம் தேதி முதல் விளையாட உள்ளன. இந்த இரு தொடர்களையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு சர்வதேச அணியும் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த வகையில், ஆசிய கோப்பை தொடரை நடத்த உள்ள நாடான பாகிஸ்தான் அணி தங்களது புதிய ஜெர்சியை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. பச்சை நிறத்துடைய இந்த ஜெர்சியில் தங்களது நாட்டை மையப்படுத்தியும், உலக கோப்பையை நெஞ்சில் அச்சிட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்சியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட வீரர்கள் அணிந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.