இந்த டிஜிட்டல் உலகில் வாழும் மக்கள் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றனர். மேலும் டெக்னாலஜியை நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இந்திய திகழ்ந்து வருகிறது.
இந்தியாவில் ஏராளமானவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வெளியாகி வரும் ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் சி டைப் சார்ஜர் விதத்தில் வெளி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்தியாவிற்குள் பயன்படுத்தும் அனைத்து வகையான மொபைல் , லேப்டாப்,டேப் ஆகிய அனைத்திற்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் டிவைஸ் உருவாக்கும் நிலையில் ஒரே நாடு ஒரே சார்ஜர் என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தால் சுற்றுசூழல் பாதிப்பை கட்டுப்படுத்தவும், இ-குப்பைகளை குறைக்கவும் பயன்படுகிறது. மேலும் முன்னதாக தொடங்கிய மத்திய அரசு தற்போது ஒரு நிபுணர் குழு ஒன்றை அமைத்து இது குறித்து அறிக்கையை இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்க சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.