மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் எதுவும் வராததால் தமிழகத்தில் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
ஏப்ரல் 1ல் நடத்தப்படாது..!
என்.பி.ஆர் என்று அழைக்கப்படும் மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளது. அதில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. அதற்கு இதுவரை பதில் எதுவும் வராததால் தமிழகத்தில் என் பி ஆர் பணி தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
என்.பி.ஆரில் சேகரிக்கப்படும் தகவல்களைக் கொண்டே என்.ஆர்.சி உருவாக்கப்படும் என்ற அச்சம் நிலவுவதாலும் என்.பி.ஆரில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாலும் என்.பி.ஆர் எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |