வட கிழக்கு மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருவது தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் எப்படி
வட கிழக்கு பருவ மழையால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பொழிந்தது. அடுத்த 48 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இதில்,’ தமிழக கடற்கரையோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்ப நிலை 34, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியத்தை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (சென்டிமீட்டரில் ) :
அதிகபட்சமாக கோத்தகிரியில் (நீலகிரி ) 8, குறைந்தபட்சமாக வால்பாறையில் (கோவை ) 3. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.