இந்தியாவில் மட்டும் தான் இனி கிரெடிட் அண்ட் டெபிட் கார்ட் பயன்படுத்த முடியும்..! ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு.!

0

வங்கிகளில் நாம் பயன்படுத்தும் கிரெடிட் அண்ட் டெபிட் கார்டகளில் ரிசர்வ் வங்கி புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் மட்டுமே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டகளை பயன்படுத்த முடியும். அந்த நெறிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றது.

ரிசரவ் வங்கி..!

கிரெடிட் அண்ட் டெபிட் கார்டுகளை உளநாட்டில் ஏ.டி.எம்., மையங்­கள் மற்­றும் பி.ஓ.எஸ்., டெர்மினல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாற்றி வழங்கப்படும் கார்டுகளுக்கும் இது பொருந்தும். ‘ஆன்லைன்’ பரிவர்த்தனை, வெளிநாட்டு பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகள் தேவை எனில், வாடிகையாளர்கள் இது தொடர்பாக வங்கியை தொடர்பு கொண்டு தனியே விண்ணப்பிக்க வேண்டும். இந்த சேவைகள் இயல்பாக கார்டில் இடம்பெற்றிருக்காது.

வாடிக்கையாளர்கள் கார்டை இந்தியாவிற்கு வெளியே பயன்படுத்த விரும்பினால் வங்கியிற்கு சென்று அதற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். இதன் தன்மைக்கேற்ப வங்கிகள், தற்போதைய கார்டை ரத்து செய்து, புதிதாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதுவரை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கார்டை பயன்படுத்தியது இல்லையெனில் , அந்த வசதியை செயலிழக்க செய்யும் உரிமை வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது. கார்டில் குறிப்பிட்ட வசதியை பெற அல்லது செயலிழக்க வைக்கவும் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here