தமிழக சட்டசபையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அதில் ஒன்றாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத்திட்டத்திற்காக இப்போது ரூபாய் 13, 720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் பல கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது இந்த அறிவிப்பின் மூலம் இன்னும் பல புதிய பயனாளர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்க அதிக வாய்ப்பு உள்ளது.