இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது களமிறங்க உள்ளது. இந்த தொடரானது, தோனியை மையமாக கொண்டே நகர்கிறது.
தமிழகத்தில் இந்த சுற்றுலா இடங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து சேவை., அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!!!
இதையடுத்து, இந்த சீசன் தான் இவரது, கடைசி சீசனாக இருக்கும் என எண்ணி, தற்போதில் இருந்தே தோனியின் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தோனி தனது அதிகாரப்பூர்வ FACEBOOK பக்கத்தில் ஓர் முக்கிய தகவலை பதிவிட்டுள்ளார். அதில் புதிய ‘சீசன்’.. புதிய ‘ரோல்’.. இதற்காக காத்திருக்க முடியவில்லை பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் தோனி இந்த ஆண்டு பயிற்சியாளராக செயல்பட உள்ளார் அதனால் தான் நியூ ரோல் எனக் குறிப்பிட்டுள்ளார் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.