விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. காவேரியின் தங்கைக்கு ஆபரேஷன் செய்வதற்கான பணத்தை விஜய் கொடுத்திருந்தார். மேலும் பணம் கொடுத்ததற்காக ஒரு வருட திருமண ஒப்பந்தத்தில் காவேரியை கையெழுத்து போட வைத்திருந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து ஞாயிற்று கிழமைக்குள் நமக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும் என விஜய் கூறியிருந்தார். இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் தன் குடும்பத்திற்கு தெரியாமல் விஜய்யை திருமணம் செய்து கொள்ள காவேரி தயாராகிறார்.
என்னது., முத்த காட்சிகளில் நடிக்க கூடுதல் சம்பளமா? ராஷ்மிகா கொடுத்த அதிரடி விளக்கம்!!
மேலும் கோவிலில் வைத்து திருட்டுத்தனமாக இவர்களின் கல்யாணம் நடக்க இருக்கிறது. அப்போது கோவிலுக்கு வந்த பசுபதி காவேரியை மணக்கோலத்தில் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மேலும் விஜய் காவேரி கழுத்தில் தாலி கட்ட வருவதை பார்க்கும் பசுபதியால் இந்த கல்யாணம் நிற்குமா?? என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிவின் & காவேரியின் காதல் விஷயத்தை பசுபதி விஜயிடம் கூறும் பட்சத்தில் இந்த திருமணம் நின்றுவிடுவதற்கு வாய்ப்புள்ளது.