கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீவு நாடான சமோவாவில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை, வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
தனது கியூட்டி பை உடன் நெருக்கமாக போஸ் கொடுத்த ‘செமபருத்தி’ ஷபானா – அப்போ ஆர்யன் எங்க பாஸ்!!
ஊரடங்கு நீட்டிப்பு :
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. டெல்டா மற்றும் ஓமைக்ரான் என மரபணு மாறிய இந்த கொரோனா வைரஸ் பல லட்சம் மக்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. தற்போது, சீனாவில் இந்த கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீவு நாடான சமோவாவில், கடந்த சில தினங்களுக்கு முன் பெண் ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தீவு நாட்டில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அங்கு 3 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருந்தாலும், இங்கு தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அதாவது, ஏப்ரல் 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். இங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் தளர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்