கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் பகுதிக்கு 3 நாள் முழு பொது முடக்கத்தை அந்த மாநில அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு:
கொரோனா பரவல் நாளுக்குநாள் மேகாலயா மாநிலத்தில் அதிகமாக பருவுவதால் அந்த மாநில அரசு இந்த முடிவினை எடுத்து உள்ளது . இந்த பொது முடக்கம் ஜூலை 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் பிரஸ்டோன் டின்சோங் தெரிவித்து உள்ளார். இது ஷில்லாங் இல் அமலாக உள்ளது.
பொது முடக்கம்:
இது குறித்து அவர் கூறியதாவது ” நாளுக்குநாள் பரவல் அதிகமாக இருந்து வந்தது. எங்களுக்கு அது கவலை அளிக்கும் விதமாக இருந்தது. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இன்னும் சூழ்நிலை மோசமாக இருந்தால், முடக்கத்தை இன்னும் சில நாட்களுக்கு அமல் படுத்துவோம்.”
கொரோனா பாதிப்பு செப்டம்பர் மாத நடுவில் சரிய தொடங்கும் – பொதுச் சுகாதார மையத்தின் இயக்குநர் தகவல்..!!
![Lockdown In Meghalaya if situation worsens: Prestone Tynsong](https://assets.sentinelassam.com/h-upload/2020/07/08/1600x960_142542-prestone-tynsong.jpg)
கடந்த ஜூலை 23 ஆம் தேதி நிலவரப்படி அங்கு 40,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.