நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பொது மக்களின் பயணத்தை எளிமையாக்குவதற்காகவும் மெட்ரோ ரயில் சேவையை மத்திய, மாநில அரசு கொண்டு வந்தது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில இடங்களில் மெட்ரோ சேவை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் ஹைதராபாத்தில் பழைய நகரத்திற்கான மெட்ரோ ரயில் பணிகள் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதாவது செகந்திராபாத் மற்றும் பலக்னுமாவில் உள்ள ஜூபிலி பேருந்து நிலையத்தை இணைப்பதற்கான மெட்ரோ பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் சொத்து கையகப்படுத்தல் மற்றும் பாதை சீரமைப்பு போன்ற பிரச்சனைகளால் தற்போது இந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பண மோசடியில் சிக்கிய ரவீந்தர்., வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் போலீசார்., லீக்கான தகவல்!!
இதனால் தெலுங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே.டி.ராமராவ் ஹைதராபாத் பழைய நகரத்திற்கான மெட்ரோ ரயில் இணைப்புத் திட்டத்திற்கான பணிகளை விரைவு படுத்துமாறு முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த திட்டத்தை உடனே செயல்படுத்தினால் பழைய நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என அவர் தெரிவித்துள்ளார்.