முதலில் ஒரு சில லட்சங்களுக்கு கமிட்டாகும் நாயகிகள், படம் மட்டும் ஹிட் ஆகிவிட்டால் போதும், அடுத்த அடுத்த படங்களில் அவர்களின் சம்பளத்தை கோடியில் தான் கேட்கிறார்கள். அந்த வகையை சேர்ந்தவர் தான் தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்போது இவரை ஜீ தெலுங்கு சேனல் ஒரு கோடி வரை சம்பளம் கொடுத்து தங்களின் சேனல் உடன் இணைத்து கொண்டு உள்ளது.
தங்களின் டிவி சேனலை பிரபலபடுத்த வெள்ளித்திரையில் மிக பிரபலாமாக இருப்பவர்களை தங்களின் சீரியல் அல்லது டிவி ஷோக்களுக்கு அழைப்பது பல முன்னணி தொலைக்காட்சிகளின் வழக்கம். இந்நிலையில் அந்த பிரபலத்தின் புகழுக்கு ஏற்ப அவர்களுக்கு சம்பளமும் நிர்ணயிக்கபடும். அதே போல் டாப் சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜீ குழுமத்தில், தெலுங்கில் மிக பிரபலமான ஜீ தெலுங்கு டிவியில் தங்களின் ஒரு சில சீரியல்களில் அவ்வப்போது தலைகாட்ட மற்றும் முக்கிய விழாக்களின் போது ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள கீர்த்தி ஷெட்டியை கமிட் செய்து உள்ளது.
மேலும் இதற்கென தனியாக எந்த விதிமுறைகளும் கிடையாது அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும், நடித்து கொடுக்கவேண்டும் என்பது மட்டுமே. இதற்கெல்லாம் அம்மணி தலையாட்டி உள்ளார். மேலும் அதற்காக அவர் வாங்கிய சம்பளம் ஒரு கோடி ஆகும். 17 வயதிலேயே இவருக்கு இவ்வளவும் மவுசு கிடைக்க காரணம் அவர் நடித்து படு ஹிட்டான ஒரே ஒரு படம் தான்.
அதாவது தெலுங்கில் வெளியான உப்பண்ணா என்ற படத்தில் வைஷ்ணவ் தேஜ்க்கு ஜோடியாக விஜய் சேதுபதியின் மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளார். இதன் படம் படு ஹிட்டானதோடு, கீர்த்தி ஷெட்டிக்கு தெலுங்கு மட்டுமில்லாமல் அணைத்து மொழிகளிலும் ரசிகர்களை உருவாக்கியது. இந்த படத்திற்கு பிறகு தான் அம்மணிக்கு இவ்வளவு மவுசு கூடியது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து அவர் பல படங்களில் தற்போது கமிட் ஆகிவருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்