மாநிலத்தில் புதிதாக தட்டம்மை என்ற வைரஸ் பரவல் அதி தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கேரளா அரசு அறிவித்துள்ளது.
புதிய பாதிப்பு :
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ், மக்களை படாத பாடு படுத்தி வருகிறது. இந்தத் தொற்றே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் தற்போது புதிதாக குரங்கம்மை, தக்காளி காய்ச்சல் போன்ற புதுப்புது நோய்கள் உருவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் நம் அண்டை மாநிலமான கேரளாவில், புதிதாக தட்டம்மை என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கேரளா முழுவதும் வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு பறவை காய்ச்சல் பரவி வரும் சூழ்நிலையில், தற்போது தட்டம்மை வைரஸ் அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பூசிகளை செலுத்த அரசு, நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் புதிது புதிதாக பரவி வரும் நோய்களை நினைத்து, மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.