கயல் தொடரில் நடித்து வரும் சைத்ரா, தனது உயிர்த்தோழியின் காதலை அவரது வீட்டில் மாட்டி விட்டதன், சுவாரசிய தருணத்தை நகைச்சுவையாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சைத்ரா பேட்டி:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில், வில்லியாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் நடிக்கும் போதே இதன் கதாநாயகி நட்சத்திரா, தனது சக சீரியல் நடிகைகளான ஷபானா, ரேஷ்மா ஆகியோருடன் மிக நெருக்கமாக பழகி வந்தார். இந்த நால்வரும் உயிர் தோழிகளாக இருந்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், கயல் சீரியலில் நடித்து வரும் சைத்ரா, தனது உயிர் தோழி ரேஷ்மா-வின் காதல் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது தனது நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த போது, அவரது boyfriend மதனையும் உடன் அழைத்து வந்திருந்தார். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்த மாதிரி, எடுத்துக் கொண்ட போட்டோவை நான் தெரியாமல் spread செய்துவிட்டேன்.
அதன் பிறகு தான் இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது. தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். இருந்தாலும் அந்த நேரத்தில் அவர்கள் காதலுக்கு நான் வில்லியாக மாறிவிட்டேனோ? என எனக்குள் நானே ஒரு சில நேரம் யோசித்துக் கொள்வேன் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.