தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஞானவேல் ராஜா, தமிழகத்தை உலுக்கிய சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவிப்பு கிடைத்துள்ளது.
அதிரடி அறிவிப்பு:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஞானவேல் ராஜா. இவர் இயக்கத்தில் உருவான ஜெய் பீம் திரைப்படம், சாமானிய மக்களின் குரலாய் உலக அரங்கில் எதிரொலித்தது. இந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற இவர், தற்போது தமிழகத்தையே உலுக்கிய முக்கிய கொலை வழக்கு ஒன்றை படமாக எடுக்க உள்ளார். சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், தனது ஹோட்டலில் வேலை பார்த்த ஜீவஜோதி என்ற பெண்ணின் கணவரை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இது குறித்த வழக்கில் அவருக்கு, ஆய்வு தண்டனை விதிக்கப்பட்டது. 18 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில், ராஜகோபாலுக்கு இறுதி தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் 2019ல் உயிரிழந்தார்.
அதிகார வர்க்கத்தை எதிர்த்து ஜீவஜோதி தனி ஒரு பெண்ணாக இந்த வழக்கில், ஜெயித்ததை ஞானவேல் ராஜா ஹிந்தியில் தேசா கிங் என்ற பெயரில் தற்போது திரைப்படமாக எடுக்க உள்ளார். விரைவில் இது குறித்து அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்