படித்து முடித்த பல இளைஞர்களின் கனவாக இருப்பது IT நிறுவங்களில் வேலை கிடைப்பதே. அதிலும் டாப் IT நிறுவனங்கள் என்றால் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. அந்த வகையில் தற்போது டாப் IT நிறுவனங்களாக இருக்க கூடிய டி.சி.எஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது அடுத்த ஓர் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க போவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா என்னும் கொடிய வைரசால் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதித்தது. இந்நிலையில் அதன் பரவல் மெல்ல மெல்ல குறைய தொடங்கி வருகிறது. இருப்பினும் இதில் அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டது கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் தான். அதிலும் குறிப்பாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களே. இந்நிலையில் அவர்களை குஷிப்படுத்தும் வகையில் டாப் மென்பொருள் நிறுவனங்கள் ஒரு அதிரடி அறிவிப்பை தெரிவித்து உள்ளது.
அதாவது, வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான வர்த்தகங்கள் கிடைக்கப் பெறுவதால் மேலும் அதிகமான ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு டி.சி.எஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் அடுத்த ஓர் ஆண்டில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்க முடிவு எடுத்து உள்ளது. மேலும் இது போல இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த ஆண்டு பல இளைஞர்களுக்கு வேலை வழங்கி உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டும் இது போன்றதொரு வேலை வாய்ப்பை வழங்க திட்டமிட்டு இருப்பது அனைவர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்